சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
523   ஸ்ரீ சைலம் திருமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 182 - வாரியார் # 243 )  

ஒருபதும் இருபதும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.
Easy Version:
ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும்
உணர்வுற
இருபதம் உளநாடி
உருகிட
முழுமதி தழலென ஒளிதிகழ்
வெளியொடு ஒளிபெற விரவாதே
தெருவினில் மரமென
எவரொடும் உரைசெய்து திரிதொழில்
அவமது புரியாதே
திருமகள் மருவிய
திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு
கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர்
பழமொழி எழுதிய
கணபதி யிளையோனே
பெருமலை யுருவிட
அடியவர் உருகிட
பிணிகெட
அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட
கலைதிரள் பிணையமர்
திருமலை பெருமாளே.
Add (additional) Audio/Video Link

ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும் ... ஒரு பத்து,
இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு
தத்துவங்களின்
உணர்வுற ... உண்மையை உணர்ந்து,
இருபதம் உளநாடி ... உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில்
தியானித்து
உருகிட ... அதனால் உள்ளம் உருகிட,
முழுமதி தழலென ஒளிதிகழ் ... பூரண சந்திரனது தீப்போன்று
ஒளி வீசும்
வெளியொடு ஒளிபெற விரவாதே ... பரவெளியின் ஒளியை யான்
பெற்று அதோடு கலவாமல்,
தெருவினில் மரமென ... வீதியிலே மரம் போல நின்று
எவரொடும் உரைசெய்து திரிதொழில் ... யாரோடும் பேசித் திரியும்
தொழிலை
அவமது புரியாதே ... யான் மேற்கொண்டு வீணாக அலையாது
இருப்பதற்காக,
திருமகள் மருவிய ... லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய
திரள்புய அறுமுக ... திரண்ட தோள்களை உடையவனே,
ஆறுமுகனே,
தெரிசனை பெறஅருள் புரிவாயே ... உன் அருட்காட்சி பெற
எனக்கு அருள் புரிவாயாக.
பரிவுட னழகிய பழமொடு ... அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட
நல்ல பழங்களுடன்,
கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் ... கடலை வகைகள்,
பயறு, சில பணியாரங்களை
பருகிடு பெருவயி றுடையவர் ... உண்ணும் பெரு வயிற்றை
உடையவரும்,
பழமொழி எழுதிய ... பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை
மேருமலையில் எழுதியவருமான
கணபதி யிளையோனே ... கணபதிக்குத் தம்பியே,
பெருமலை யுருவிட ... பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும்,
அடியவர் உருகிட ... உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும்,
பிணிகெட ... அடியார்களின் பிறவிநோய் தொலையவும்
அருள்தரு குமரேசா ... திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே,
பிடியொடு களிறுகள் நடையிட ... பெண்யானைகளோடு
ஆண்யானைகள் உலாவும்,
கலைதிரள் பிணையமர் ... கலைமான்களின் கூட்டம்
பெண்மான்களோடு விரும்பி அமரும்
திருமலை பெருமாளே. ... திருமலையாகிய ஸ்ரீசைலத்தில் உள்ள
பெருமாளே.

Similar songs:

240 - அரகர சிவன் அரி (திருத்தணிகை)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

523 - ஒருபதும் இருபதும் (ஸ்ரீ சைலம் திருமலை)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

751 - திருமொழி (விருத்தாசலம்)

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

Songs from this thalam ஸ்ரீ சைலம் திருமலை

750 - குடத் தாமரையாம்

751 - திருமொழி

752 - பசை அற்ற உடல்

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song